செவ்வாய், 13 செப்டம்பர், 2016

எரிமலை நிலவுருவங்கள்

                   
      எரிமலை செயற்பாட்டால் புவியில் ஏற்படும் நிலவுருவங்கள் இரண்டு வகைப்படும் .

  1. தள்ளல் நிலவுருவங்கள் 
  2. தலையீட்டு நிலவுருவங்கள் 

 

தள்ளல் நிலவுருவங்கள்

காரக்கூம்பு 
அமிலக்கூம்பு 
சாம்பல் கூம்பு
கூட்டெரிமலை 
எரிமலை வாய் ஏரி 

தலையீட்டு நிலவிருவங்கள்

குத்துத் தீப்பாறை 
கிடைத்தீப்பாறை 
குமிழ்த் தீப்பாறை
குழிவுத் தீப்பாறை
வில்லை த்தீப்பாறை 


தள்ளல் நிலவுருவங்கள்

காரக்கூம்பு

          
  எரிமலை செயற்பாட்டின் போது  வெளிவரும் மக்மா குழம்பில் சிலிக்காவின் அளவு 50 சதவீதத்தை விட குறைவாகவும் இரும்பின் அளவு அதிகமாகவும் காணப்படின் அந்த மக்மா திரவ நிலையில் காரத்தன்மை கொண்டதாகக் காணப்படும்.இதனால் வெளிவரும் லாவா உயரம்குறைந்த கூம்பாக பரவி விரைவில் குளிர்ந்து கடினமாகிவிடும் இதனை காரக்கூம்பு எனப்படும் .

அமிலக்கூம்பு

          எரிமலைக் குழம்பில் சிலிக்கா 50 சதவீதத்தை  விட கூடவாகவும் இரும்பின் அளவு  குறைவாகவும் காணப்படும்  பொழுது மக்மா திண்ம நிலையில் காணப்படும். இதனால் குறுகிய பரப்பில் பரந்து உயரம் கூடிய 
கூம்பாக காணப்படும் இதனையே அமிலக்  கூம்பு  என்பர் .


கூட்டெரிமலை 
          
மத்திய எரிமலை வாய் அடைப்பட்டுத் தடைப்பட்டால் கூம்பின் பக்கங்களில்  எரிமலை வாய்கள் தோன்றி ஒன்றுக்கு மேற்பட்ட வாய்கள்மூலம் கக்கப்படுவதுண்டு .ஒரு கூம்பில் பல எரிமலை வாய்கள் காணப்படின் அதனை கூட்டெரிமலை என்பர் .இத்தாலியில் உள்ள விசுவியஸ்  இத்தகைய எரிமலை ஆகும்.

எரிமலை வாய் ஏரி

           எரிமலை ஒன்று அவிந்த எரிமலை ஆகும்போது அதன் வாய் பகுதியில் நீர் தேங்கி  ஏரியாக மாறிவிடும்போது அது எரிமலை வாய் ஏரி எனப்படும்.


தலையீட்டு நிலவிருவங்கள் 

           எரிமலை செயற்பாட்டின் போது லாவா குழம்பானது புவியோட்டின் கீழ்  பாறைப்படை தளங்களிற்கிடையில் தலையிட்டு இறுகி கடினமாகிவிடும் போது அது  பல வடிவங்களில் காணப்படும் .அதனை தலையிட்டு தீப்பாறை என்பர் .இதனை அதன் வடிவங்களின் அடிப்படையில் பல்வேறு  வகைப்படுத்தலாம் .

 குத்துத் தீப்பாறை

        
  எரிமலை குழம்பின் தலையீட்டினால் உருகிய பருப்பொருட்கள் பாறைப்படை தளங்களுக்கிடையே செங்குத்தாக  கடினமாகும் போது
குத்துத் தீப்பாறை (லக்கோலித்) என்பர் .

 கிடைத்தீப்பாறை

       பொழுது அதனை கிடைத் தீப்பாறை என்பர் .
எரிமலை செயற்பாட்டின் போது  உருகிய பாறைக்  குழம்பு பாறைப்படை தளங்களுக்கிடையே கிடையாக புகுந்து  கடினமாகி (பக்கோலித்) விடும்

 குமிழ்த் தீப்பாறை

      எரிமலை செயற்பாட்டின் போது பாகுத்தன்மையான  பாறைக்  குழம்பானது மேல்தள்ளப்ப்ட்டு பாறைப்படை தளங்களுக்கிடையே குமிழ் வடிவில் தலையிட்டு இறுகி கடினமாகிவிடும்.இதனையே குமிழ்த் தீப்பா றை என்பர் .
 

குழிவுத் தீப்பாறை 

      
எரிமலை செயற்பாட்டின் போது  பாறைக்  குழம்பானது பாறைப்படை தளங்களுக்கிடையே குழிவு வடிவில் தலையிட்டு இறுகி கடினமாகிவிடும் . இதனையே குழிவுத் தீப்பாறை என்பர் .

வில்லை த்தீப்பாறை 

     எரிமலை செயற்பாட்டின் போது உருகிய பாறைக்  குழம்பான மக்மா
பாறைப்படை தளங்களுக்கிடையில் வில்லை வடிவில் தலையிட்டு இறுகி கடினமாகிவிடும் பொழுது அதனை வில்லைத் தீப்பாறை என்பர் .
 


எரிமலை நிலவுருவங்கள் இவை தவிர இன்னும்  பல உள்ளன .எனினும் இவை மாணவர்களுக்கு போதுமானது  நினைத்து மட்டுப்படுத்தி தந்துள்ளான் 









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக